அமெரிக்கா சரமாரியாக தாக்கிய பின்பும் கூட.. ஈரான் சிறந்த நகர்வு .இஸ்ரேல் கனவு பலிக்கவில்லையே..
அமெரிக்காவின் படைகளை வைத்தே இஸ்ரேல் ஈரானை வீழ்த்த முடியும் என்று கனவு கண்டது.

டெஹ்ரான்: ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
ஈரான் மீது குண்டுபோட வைத்து அமெரிக்காவை போருக்குள் இழுத்துவிட இஸ்ரேல் முயன்றது..
அதாவது ஈரானை அமெரிக்காவை விட்டு தாக்க வைத்தால் ஈரான் அமெரிக்காவை பதிலுக்கு தாக்கும். இதற்கு அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பதிலடி கொடுக்கும்.
அப்படி நடந்தால் ஈரான் எளிதாக வீழ்ச்சி அடையும். இஸ்ரேல் அதிகம் போரில் ஈடுபடாமல், அமெரிக்காவை தனது கைக்கூலியாக பயன்படுத்தி ஈரானை வீழ்த்த முடியும்.
அமெரிக்காவின் படைகளை வைத்தே இஸ்ரேல் ஈரானை வீழ்த்த முடியும் என்று கனவு கண்டது.
ஈரான் ஸ்மார்ட் யுக்தி
ஆனால் ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
அதாவது ஸ்மார்ட்டாக செயல்பட்டு.. அமெரிக்க தளங்கள் எதையும் தாக்காமல், இஸ்ரேல் படைகளை மட்டுமே தாக்கி வருகிறது.
ஈரானிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, டெஹ்ரான் இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை புதிய தாக்குதல்களைத் தொடங்கியது.
ஹைஃபா மற்றும் டெல் அவிவ் மீது ஈரான் இரண்டு கட்டங்களாக 27 ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படுகிறது.
இதில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தையும் குறிவைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானிய ஏவுகணை ஏவுதல் காரணமாக இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கின்றன” என்று குறிப்பிட்டது.
அமெரிக்கப் படைகள் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று ஈரானிய அணு நிலையங்களைத் தாக்கியதாக டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரானின் இந்த தாக்குதல் வந்துள்ளது.
இதனால் இஸ்ரேல் திட்டமிட்டபடி.. ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
ஈரான் – இஸ்ரேல் போரில் அமெரிக்காவின் தலையீடு
அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகப்போராக உருவெடுக்கும். அமெரிக்கா தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தலாம்.
இது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவிலும், போர்ச் சூழலிலும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.
மேலும் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்பகுதியில் சுமார் 40,000 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். டிரம்ப் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 16 அடி பாய்வோம் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி நிரூபிக்கும் விதமாக.. அமெரிக்காவின் தளவாடங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க ராணுவ தளவாடங்களை தாக்குவதற்காக.. குறைந்த மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளது.
இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உலகப் போராக தீவிரமடையக்கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஈரானின் முக்கியமான உள்கட்டமைப்பான ஃபோர்டோ அணு ஆலையை அமெரிக்கா தாக்கினால், ஈரான் மற்றும் அதன் பிராந்திய நட்பு விரைவான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கக்கூடும்..
நாம் தாக்கினால் அவர்கள் உடனடியாக அமெரிக்க தளவாடங்களை தாக்குவார்கள்.. இதனால் நிலைமை கைமீறும் என்று எச்சரித்துள்ளனர். இப்போது அமெரிக்கா தாக்கிவிட்டதால் அடுத்த கட்டமாக ஈரான் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.