புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வு செய்து ஒழுங்குபடுத்துக! - ஹரிணி அமரசூரிய.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் புதிய உத்தியோகத்தர்கள் சபைக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்.

புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வு செய்து ஒழுங்குபடுத்துக!
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் புதிய உத்தியோகத்தர்கள் சபைக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் தேசிய கல்வி ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
இதன்போது புதிய உத்தியோகத்தர்கள் சபை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய கல்விச் சீர்த்திருத்தத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் பற்றியும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
2026 முதல் புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை தொடங்குவதற்குத் தயார் என்றும், அதற்காக கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் கூட்டிணைந்து சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளும்போது தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இருக்கும் பொறுப்பு பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஆணைக்குழுவில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்தும், எதிர்காலத்தில் செய்யவேண்டிய செயற்றிட்டம் குறித்தும் இதன்போது அமைச்சர் விடயங்களை தெளிவுப்படுத்தினார்.
புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை முன்னெடுக்கும்போது பாடசாலைகள் பற்றிய மதிப்பாய்வினை மேற்கொள்ளல் மற்றும் ஒழுங்குறுத்தல் பணிகள் தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், கல்விக் கொள்கையை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ.சரத் ஆனந்த, உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோரை உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.