Breaking News
நாடு முழுவதும் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 5,896 பேர் கைது!
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு

நாடு முழுவதும் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 5,896 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட சுற்றிவளைப்பின்போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் 661 பேரும், சந்தேகத்தின் பேரில் 39 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 564 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 357 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 44 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 24 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4,207 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.