விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டி தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்!
.

யாழ். வடமராட்சியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புச்சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகளின் கொடியைப் பறக்க விடப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக் குறித்த விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் உடுப்பிட்டியில் கடந்த 26ஆம் திகதி விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸில் முறையாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மறுநாள் 27ஆம் திகதி உடுப்பிட்டியில் விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான கொடி பறக்க விடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவை தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து , பொலிஸார் அவ்விடத்துக்குச் சென்று அவற்றை அகற்றியதுடன், அவற்றை சான்றுப்பொருட்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.
இத்தகைய நிலையில் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.