'விடுதலையின் ஒளி: தந்தை கருணாரட்னத்தின் மறக்க முடியாத மரபு'
மக்களுக்கு ஒரு தந்தை, விடுதலைக்கான பாதை!

'விடுதலையின் ஒளி: தந்தை கருணாரட்னத்தின் மறக்க முடியாத மரபு' மக்களுக்கு ஒரு தந்தைஇ விடுதலைக்கான பாதை!
வன்னி மக்களால் 'கிளி தந்தை' என்று அன்புடன் அழைக்கப்படும் அருட்தந்தை கருணாரத்தினம், தமிழ் மக்களின் உயிர்களையும் விடுதலையையும் அயராது பாதுகாத்த மிக முக்கியமான ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர். அவரது மரணம் சாதாரணமானது அல்ல - இது இலங்கை அரசால் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை பிரச்சாரத்தில் ஒரு கொடூரமான செயலாகும்.
ஏப்ரல் 20, 2008 அன்று, மல்லாவி-வவுனிக்குளம் பகுதியில், இலங்கை இராணுவத்தின் இரகசியப் பிரிவுகளால் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இந்த மாபெரும் மனிதரை நாம் இழந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
போர் மற்றும் புகையின் மத்தியில் ஒரு வழிகாட்டும் ஒளி
1990களின் கடுமையான போர்க் காலத்தில், குறிப்பாக 1995 முதல் 1997 வரை, பாதிரியார் கருணாரட்னம் இடம்பெயர்ந்த தமிழ் பொதுமக்களுக்காக இரவும் பகலும் உழைத்தார். அவர் நிவாரண முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுடன் தொடர்பு கொண்டார். வெரிடாஸின் (கத்தோலிக்க தமிழ் மிஷன்) இணைப்பாளராக அவரது பங்கு தமிழ் மக்களின் துன்பங்களுக்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்க உதவியது.
தேவாலயங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல - அவை வாழ்க்கைக்கான தங்குமிடங்களாக இருந்தன
வவுனிக்குளம் மற்றும் மல்லாவி முழுவதும் உள்ள தேவாலயங்களில் பாதிரியார் கருணாரட்னம் பணியாற்றினார். இந்த தேவாலயங்கள் இராணுவத்தால் ஷெல் தாக்கப்பட்டபோதும், அவர் தனது மக்களைக் கைவிட மறுத்துவிட்டார். அவர் நம்பிக்கையின் உணர்வை வளர்த்தார். போர்க்குற்றங்கள், இன அழிப்பு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைக் குழுக்களிடம் கூட தனது மக்கள் தாங்கிய அடக்குமுறை பற்றி அவர் அச்சமின்றிப் பேசினார்.அதனாலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார் எந்த கத்தோலிக்க சபைகளும் சிங்கள அரசை நியாயம் கேட்கவில்லை!
மனித உரிமைச் செயலகம்!
வெரித்தாஸ் தமிழ் பணிக்கு வடபகுதி தொடர்பாளராகவும் பணியாற்றி மக்களின் துன்ப துயரங்களை வெளி உலகிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் தெரியப்படுத்தினார் 1998 ல் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவராக இருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கினார் 1997,1998 காலப்பகுதியில் மல்லாவியில் பங்கு தந்தையாக இருந்தார் வவுனிக்குளம் தேவாலயத்திலும் மல்லாவி பங்கிலும் தனது பணிகளை 2002 வரை செய்தார் அந்த தேவாலயம் பலமுறை இராணுவ தாக்குதலில் அகப்பட்டாலும் அதை விட்டு அகலாது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினர் மனித உரிமை செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சுயாதீனமாக செயற்பட வட-கிழக்கு மனித உரிமை அமைப்பின் தலைமை பொறுப்பை கையேற்று மிகவும் சிறப்பாக பணியாற்றினார் சமாதான காலத்தில் வரும் இராஜ தந்திரிகளுக்கு எம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன சுத்திகரிப்பை மிகவும் நேர்த்தியாக தெரிவித்துக்கொண்டு இருந்தார் இறுதியாக பனியின் நிமித்தம் தனது பங்கு மக்களையும் ஆலயத்தையும் பார்க்க சென்று விட்டு திரும்பும் வழியில் ஸ்ரீலங்கா அரசின் நயவஞ்சக தாக்குதலில் மக்களை விட்டு செல்கிறார் தாக்குதலில் பலியான பின்னரும் அப்போதைய அரசின் சில சிங்கள ஊடகங்கள் கிளி பாதர் அவர்களை புலி என வர்ணித்து செய்தி வெளியிடுகின்றன அப்போதைய பாதுகாப்பு அமைச்சரும் வெள்ளை உடுப்பு போட்ட புலிகளின் தலைவர் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அறிக்கையை விட்டார் வெள்ளை உடுப்பு போட்ட புலி என வர்ணிப்பதன் மூலம் ஸ்ரீலங்கா அரசு மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் எத்தகைய முக்கியத்துவம் பெற்றது என்பதை சொல்லாமல் சொல்லி சென்றது மனித விடுதலை போராட்டமானது தனித்து மண் விடுதலை மட்டும் இன்றி மனித சமுதாய விடுதலையின் விழுமியங்களை உள்ள்ளடக்கியதாக உள்ளது என்பதை மேற்குலகிற்கு தெரிவிப்பதில் அவர் பங்கு அளப்பரியது சொல்லிலும் செயலிலும் எப்போதும் ஒத்த தன்மையுடன் செயற்பட்ட கிளி பாதரின் இழப்பு திருச்சபைக்கும், எமது ஈழ மக்களுக்கும்,மக்களின் விடுதலை போராட்டத்திக்கும் பேரிழப்பே! வவுனிக்குளம் தேவாலயத்திலும், மல்லாவி பங்கிலும் தனது பணிகனை 2002 ஆம் ஆண்டுவரை செய்து கொண்டிருந்தார். அந்த தேவாலயம் பலமுறை இராணுவத் தாக்குதலிற்கு உள்ளாகி இருந்தாலும் அதனை விட்டு அகலாது மக்களிற்கு நம்பிக்கையினை ஊட்டினார். சமாதான காலப்பகுதியில் மக்களின் பாதிப்புக்கள் அவர்களின் உரிமைகள் தொடர்பாக வெளி உலகிற்கு கொண்டு வருவதுடன் மனித உரிமைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கும் அதன் செயற்பாடுகளை தாயகத்தில் சுதந்திரமாக செயற்படுத்துவதற்குமாக உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இறுதியாக கையேற்று மிகவும் சிறப்பாக பணியாற்றினார்.
சமாதான காலப்பகுதியில் வருகை தந்த இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை நிறுவனங்களிற்கும் தாயகத்தில் மனித உரிமை செயற்பாடுகள் பற்றியும் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் தெரிவித்துக்கொண்டே இருந்தார். மனித விடுதலைப் போராட்டமானது தனித்து மண் விடுதலை மட்டுமன்றி ஒட்டுமொத்தமான மனித சமுதாய விடுலையின் விழுமியங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது என்பதனை மேற்குலகிற்கு தெரிவிப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்புக்கள் இன்றியமையாதனவாக இருந்தன. சொல்லிலும், செயலிலும் எப்போதுமே ஒத்த தன்மையுடன் செயற்பட்ட அருட்தந்தையின் இழப்பு எமக்கும் திருச்சபைக்கும் எமது தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அவரின் செயற்பாடுகளை எமக்கு பாடமாகக்கொண்டு அவரது பணிகளையும் சேர்த்து நாமெல்லோரும் முன்னெடுப்போம். சுதந்திரமாகச் செயற்பட்ட உள்ளூர் மனித உரிமைக் காண்காணிப்பு அமைப்பான வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் என்ற ஒன்றைத் தோற்றுவித்த கருணாரத்தினம் அடிகளால் அதன் பணிப்பாளராகச் செயற்பட்டார்.