Breaking News
செம்மணி இன வழிப்பு செயற்பாட்டின் ஆரம்பம் அது!
சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை.

செம்மணி இன வழிப்பு செயற்பாட்டின் ஆரம்பம்.
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதிமூலம் தொடர்பில் உறுதியான தகவல்கள் நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
அத்துடன், அகழ்வுகளுக்காக துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவை அழைப்பது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இவற்றை ஆராய்ந்த மன்று, வழக்கை நாளைமறுதினம் வரை தவணையிட்டுள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பான கட்டளைகள் நாளைமறுதினம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சனும், ரனித்தா ஞானராஜாவும் முன்னிலையாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீள்பதிவு:
ஒரு நாள் கேப்டன் லலித் கேவா என்னை அழைத்தார் மண்வெட்டியை விரைந்து எடுத்து வருமாறு கட்டளையிட்டார். அவர் குறிப்பிட்டபடியே மண்வெட்டியை எடுத்துக்கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். நான் அவ்விடத்தை அடைந்த போது அங்கு ஆடையின்றி ஒரு பெண்ணொருவர் நிர்வாண கோலத்தில் நின்றார். கேப்டன் லலித் கேவா அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தினார்,பின்பு நான் எடுத்து வந்த மண்வெட்டி மற்றும் அங்கிருந்த இன்னும் சில ஆபத்தான பொருட்களைக் கொண்டு அந்தப் பெண்ணையும் அவருடைய துணைவரையும் தாக்கி காயப்படுத்தினர். இருவரும் அந்த இடத்திலேயே சாவடைந்தனர். அவர்கள் இருவரும், முன்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டவர்கள். இது சோம ரத்தின ராஜபக்ஷவின் வாக்குமூலம். உண்மையில் யார் இந்த சோமரத்தின ராஜபக்சா, எதற்கு அவன் இப்படி ஒரு வாக்குமூலத்தை அளித்தான் என்ற கேள்விகள் உங்களுக்கு இயல்பாகவே எழுவது புரிகிறது 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியை கடந்து வந்த ஒவ்வொரு தமிழ்க் குடிகளினது நெஞ்ச குழியினுள் இந்த கேள்விகளுக்கான பதில், தீர்வு இன்றி அங்கலாய்த்து கொண்டிருக்கும் செம்மணி இன வழிப்பு செயற்பாட்டின் ஆரம்பம்"அது.
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதிமூலம் தொடர்பில் உறுதியான தகவல்கள் நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
அத்துடன், அகழ்வுகளுக்காக துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவை அழைப்பது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இவற்றை ஆராய்ந்த மன்று, வழக்கை நாளைமறுதினம் வரை தவணையிட்டுள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பான கட்டளைகள் நாளைமறுதினம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சனும், ரனித்தா ஞானராஜாவும் முன்னிலையாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீள்பதிவு:
ஒரு நாள் கேப்டன் லலித் கேவா என்னை அழைத்தார் மண்வெட்டியை விரைந்து எடுத்து வருமாறு கட்டளையிட்டார். அவர் குறிப்பிட்டபடியே மண்வெட்டியை எடுத்துக்கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். நான் அவ்விடத்தை அடைந்த போது அங்கு ஆடையின்றி ஒரு பெண்ணொருவர் நிர்வாண கோலத்தில் நின்றார். கேப்டன் லலித் கேவா அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தினார்,பின்பு நான் எடுத்து வந்த மண்வெட்டி மற்றும் அங்கிருந்த இன்னும் சில ஆபத்தான பொருட்களைக் கொண்டு அந்தப் பெண்ணையும் அவருடைய துணைவரையும் தாக்கி காயப்படுத்தினர். இருவரும் அந்த இடத்திலேயே சாவடைந்தனர். அவர்கள் இருவரும், முன்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டவர்கள். இது சோம ரத்தின ராஜபக்ஷவின் வாக்குமூலம். உண்மையில் யார் இந்த சோமரத்தின ராஜபக்சா, எதற்கு அவன் இப்படி ஒரு வாக்குமூலத்தை அளித்தான் என்ற கேள்விகள் உங்களுக்கு இயல்பாகவே எழுவது புரிகிறது 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியை கடந்து வந்த ஒவ்வொரு தமிழ்க் குடிகளினது நெஞ்ச குழியினுள் இந்த கேள்விகளுக்கான பதில், தீர்வு இன்றி அங்கலாய்த்து கொண்டிருக்கும் செம்மணி இன வழிப்பு செயற்பாட்டின் ஆரம்பம்"அது.