Breaking News
அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்து; பிலடெல்பியாவில் வீடுகள் மீது விழுந்த விமானம்,
,

ஒரு குழந்தை உட்பட ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் விபத்துக்குள்ளானது. விபத்தின் போது விமானம் வெடித்ததில் அங்கிருந்த பல வீடுகள் தீக்கு இரையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பற்றி அறிக்கை விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அறிக்கையில், ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் ஆம்புலன்ஸ், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் அட்டெண்டர் உடன் விமானம் விபத்துக்குள்ளானது என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ்தெரிவித்துள்ளது. ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) படி, வெள்ளிக்கிழமை மாலை ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்து ஏற்பட்டது