உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு!
.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் சதுரங்க சாம்பியன் டி. குகேஷ் இன்று சென்னை திரும்பினார்.உலகக்கோப்பை உடன் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சிங்கப்பூரில் நடந்த இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார்.கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக, இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் குகேஷ்.
நாளை பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு
உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, இன்று சென்னை திரும்பிய குகேஷ்-ஐ தமிழக அரசு அரசு சார்பில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, பூங்கொத்து தந்து வரவேற்றார்.அதோடு, நாளை, தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், குகேஷ்க்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.அப்போது அரசு சார்பாக, குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் நிருபர்களுடன் பேசிய குகேஷ்,"உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி. டிங் லிரேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு செல்ல, சென்னை செஸ் ஒலிம்பியாட் உதவியது. கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி. அனைவரின் ஊக்கமும், எனக்கு புத்துணர்ச்சியை தந்தது," என்று கூறினார்.