Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நிலுவை வரித்தொகை செலுத்தப்படாமையால் மென்டிஸ் நிறுவனத்தின் 8 மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தியுள்ளது!

.

அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை வரித் தொகையை செலுத்தாமையால் W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 10 மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரங்களில் 8 பத்திரங்களை இன்று(04) முதல் இடைநிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது.

W.M.மென்டிஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய முழுமையான நிலுவை வரித் தொகையை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்தாவிட்டால் தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து கலால்வரி திணைக்களத்தால் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி W.M.மென்டிஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்காது தள்ளுபடி செய்யவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.