அநுர குமார திசநாயக்கே இலங்கையின் முதல் கம்யூனிச அதிபர் : அதிகமான வாக்குகள் பெற்று அபார வெற்றி!
.

இலங்கையின் முதல் கம்யூனிச அதிபர் : 50%-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று அநுர குமார திசநாயக்கே அபார வெற்றி!
நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 38 பேர் போட்டியிட்டனர். எனினும் இதில் 3 பேர் மட்டுமே பிரதான வேட்பாளராக கருதப்பட்டனர்.
இலங்கையின் பாரம்பரிய கட்சிகளாக சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் பலவீனமடைந்துள்ள நிலையில், கட்சியைத் தாண்டி வேட்பாளர்களே இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி சார்பிலும், கடந்த அதிபர் தேர்தலில் 3 % வாக்குகளை பெற்ற அநுர குமார திசநாயக்கே இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சார்பாகவும் போட்டியிட்டனர். இவர்கள் மூன்று பேருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
இதில் கருத்து கணிப்புகளில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த அநுர குமார திசநாயக்கே, பிரச்சாரம் ஆரம்பித்த நிலையில் முன்னிலை பெறத்தொடங்கினார். வழக்கமாக இலங்கை தேர்தலில் இனவாதம் முக்கிய இடம்பெறும் நிலையில், இந்தத் தேர்தலில் பொருளாதார தேக்கநிலையே முக்கிய இடம்பிடித்தது.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஆரம்பத்திலிருந்தே தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசநாயக்கே முன்னிலை பெற்றார். இன்று அதிகாலை அவர் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளில் 51 % வாக்குகளை பெற்றதாக முடிவுகள் வெளியான நிலையில், அவர் இலங்கையின் அடுத்த அதிபராக பதவியேற்பது உறுதியானது.
இதன் மூலம் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராக அநுர குமார திசநாயக்கே பொறுப்பேற்கவுள்ளார். அவரின் மக்கள் விடுதலை முன்னணி கட்சி ஒரு காலத்தில் இலங்கை அரசை எதிர்த்து ஆயுதபுரட்சியை மேற்கொண்டது. பின்னர் அதனை கைவிட்டு தேர்தல் அரசியலில் கால்பதித்த நிலையில், அந்த கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இது இலங்கை வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.