மூன்றாவது முறையாகவும் மோடி பிரதமராக பதவிப் பிரமாணம். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி.
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என மோடியின் அழைப்பை ஏற்று ரணில் , மலைத் தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ்,

பிரதமர் மோடி பதவிப் பிரமாணம்: ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் பாரதத்தில் சரித்திரம் படைப்பு.
டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (09.06.24) பிரதமர் மோடி உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்.
ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராகும் அங்கீகாரத்தை பிரதமர் மோடி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு 1952, 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று முறை பாரத்தில் ஆட்சியமைத்தார்.
இதன்பின்னர் மோடி 2014, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுமூன்றாவது முறையாகவும் பிரதமர் கதிரையை தன்வசப்படுத்தினார்.
உலகத் தலைவர்கள் பங்கேற்பு
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மலைத் தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ்,
சீசெசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அஃபிப், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்னாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் எனும் பிரசண்டா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய – மாலைத்தீவு இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸிற்கு விடுக்கப்பட்டது.
அழைப்பை ஏற்று மாலைத்தீவு ஜனாதிபதியும் இந்த விழாவில் பங்கேற்றமை வியப்புக்குரியதாகும்.