எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இல்லாதொழிக்கப்படும்!
எதிர்காலத்தில்???

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இல்லாதொழிக்கப்படும், இது "வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை" என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதை மேற்பார்வை செய்வதற்காக அமைச்சரவையினால் ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், அரசாங்கம் எந்தவொரு நெருக்கடியையும் இனவாத மனப்பான்மையுடன் அணுகாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.