பக்திப் பரவசத்துடன் பிறந்த 'பராபவ' புத்தாண்டு!
60 ஆண்டுகால சுழற்சியில் 39 ஆவது ஆண்டான 'விசுவாவசு' வருடம் நிறைவடைந்து, 40 ஆவது ஆண்டான'பராபவ' புத்தாண்டு இன்று!
தமிழ் நாட்காட்டியின் 60 ஆண்டுகால சுழற்சியில் 39 ஆவது ஆண்டான 'விசுவாவசு' வருடம் நிறைவடைந்து, 'பராபவ' புத்தாண்டு இன்று (14) காலை 8.40 மணிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இனிதே பிறந்தது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் கலாசார நிகழ்வுகளும் கோலாகலமாக நடைபெற்றன.
யாழ்ப்பாணம் - நல்லூரில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை முதல் விசேட பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் புத்தாடை அணிந்து, ஆலயங்களுக்கு வருகை தந்து இறை ஆசி பெற்றனர்.
இம்முறை சமயத்திற்கும் சமாதானத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மலையக ஆலயங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில், பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.


