Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

26 கிலோ கிராம் எடையுடைய கோகெய்ன் கனடாவில் மீட்பு

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் கனடாவின் எல்லைகளை தொடர்ந்து சோதித்து வருவதாக கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி

கொலம்பியாவிலிருந்து குளிரூட்டப்பட்ட பழங்கள் (Frozen fruit) ஏற்றிச் சென்ற சரக்கு கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 கிலோவிற்கும் அதிகமான கோகெயினை பறிமுதல் செய்ததாக கனடா எல்லை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ட்சாவாசன் (Tsawwassen) கண்டெய்னர் பரிசோதனை நிலையத்தில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
குளிரூட்டப்பட்ட பழங்கள் அடங்கிய சரக்கு என அறிவிக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னரை சோதனையிட்ட எல்லை அதிகாரிகள், போதைப்பொருள் கண்டறியும் நாய்களின் உதவியுடன், கண்டெய்னரின் மேல்பகுதி (ceiling) பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கட்டிகளான கோகெயினை கண்டுபிடித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தற்போது கனடிய பொலிஸாரின் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கனடிய எல்லை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை காலப்பகுதியில், கனடிய எல்லை சேவை நிறுவன அதிகாரிகள் 10,000க்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் 700 கிலோவிற்கும் மேற்பட்ட கோகெயின் அடங்கும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் கனடாவின் எல்லைகளை தொடர்ந்து சோதித்து வருவதாக கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார்.